கல்முனை மாநகர சபையில் மீலாதுன் நபி விழா



ஏ.எஸ்.மெளலானா-
ல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த மீலாதுன் நபி விழா இன்று வியாழக்கிழமை (12) மாநகர சபை முன்றலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மெளலவி ஷபா முஹம்மத் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

இதில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுச் சந்தை வர்த்தகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி மற்றும் மெளலவி ஷபா முஹம்மத் ஆகியோரின் உன்னத சேவைகளைப் பாராட்டி, அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் மீலாத் கந்தூரி அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

விழா நிகழ்வுகளை மாநகர சபையின் வருமானப் பரிசோதகர் சமீம் அப்துல் ஜப்பார் நெறிப்படுத்தியிருந்தார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :