உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு அரச ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் தமது இணக்கத்தை தெரிவிக்கும்.


நூருல் ஹுதா உமர்-

த்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு அரச ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் தமது இணக்கத்தை தெரிவிக்கும் எனவும் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார

நெருக்கடியில் இந்த தீர்மானம் வரவேற்புக்குரியது என அதன் உப- தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். முகம்மட் தெரிவித்தார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 2016-2019 வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 2020 ல் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பை நிலுவை எதுவுமின்றி 2024 ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மூலம்

01.01.2024 முதல் இரு கட்டங்களாக வழங்குவதற்கான ஏற்பாடு வரவு செலவுத் திட்டயோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்

பட்டுள்ளதாகவும் நேற்றைய (22) தினம் நம்பகமாக அறியக்கிடைத்தது.

தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. இது தொடர்பிலான வழக்கின் விவாதம் ஆரம்பித்துள்ளது. இதன் அடுத்த கட்ட விவாதம் எதிர்வரும் 15.02.2024 ம் திகதி இடம்பெறவுள்ளது. எனவே உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு அரச ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் தமது இணக்கத்தை தெரிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :