தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாவனெல்ல பதுறியா மத்திய கல்லூரி பழைய மாணவிகளால் மாவனெல்ல ஆதார வைத்தியசாலை நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு.



அஸ்ஹர் இப்றாஹிம்-

மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வாசிப்பு மாதம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் அக்டோபர் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் வாசிகசாலைக்கு ,மாவனல்லை வைத்திய சாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுள் ஒருவரான ரிஸ்வான் தாஹீர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

பதுரியா மத்திய கல்லூரி யின் பழைய மாணவியர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் எம். ஜே. எப். யமீனா அவர்களின் தலைமையிலான குழுவினர் வைத்திய சாலையின் சிறுவர் பிரிவு தலைமை பொறுப்பாளர் வைத்தியர் இனோக்கா ஹலன்கொட,தலைமை தாதி எஸ். கே.விஜேசிங்க ஆகியோரிடம் இத் தொகுதி நூல்கள் கையளிப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :