அம்பாறை மாவட்ட 34வது இளைஞர் விளையாட்டு விழா அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.


எம்.ஏ.ஏ.அக்தார்-

ளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்டத்தினது 34ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டி அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடனும் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களில் நடத்தப்பட்ட பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று முதலாம் இடத்தைப் பெற்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பங்கேற்புடன் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது .

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்று, முதலாம் இடங்களைப் பெறும் இளைஞர் கழக விளையாட்டு வீர, வீராங்கனைகள் 34 வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :