திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம்!


வி.ரி.சகாதேவராஜா-

ரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த கந்த சஷ்டி விரதம் எதிர்வரும் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது என்று ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

விரதகாலத்தில் தினமும் விசேட பூஜைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் உதவியோடு இடம்பெற இருக்கிறது.

எதிர்வரும் 18 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி இடம் பெற இருக்கின்றது .
மறுநாள் 19ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்வோடு கந்த சஷ்டி விரதம் நிறைவடைய இருக்கிறது எனவும் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :