இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக காரைதீவு நிவேதிகா தெரிவு.


வி.ரி.சகாதேவராஜா-

லங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த செல்வி.நிவேதிகா இராசையா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனடிய அமைப்பொன்று இலங்கையில் முதல் முதலாக இந்த போட்டியை கடந்த மூன்று மாத காலமாக நடத்தியது .கொழும்பில் நடைபெற்ற இந்த தெரிவில் முதல் சுற்றில் 120 பெண்கள் நாடளாவிய ரீதியில் இருந்து கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றில் 15 பேர் கலந்து கொண்டார்கள்.

அதில் முதலாவது இடத்தில் நிவேதிகா இராசையாவும் இரண்டாவது இடத்தில் ஆச்சர்யா யோகராஜனும் மூன்றாவது இடத்தில் சந்திரகுமார் விதுர்ஷாவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விழாவில் தெரிவான அழகுராணிகள் கிரீடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
காரைதீவைச் சேர்ந்த செல்வி.நிவேதிகா இராசையா காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையாவின் புத்திரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :