கல்முனை மஹ்மூத் கல்லூரியில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த ஏற்பாடு.!



ஏ.எஸ்.மெளலானா-

ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் நஸ்மியா சனூஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியை சந்தித்து, கல்லூரியில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பொறிமுறைகள் பற்றி ஆணையாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் பாடசாலைகளில் குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்காக மாநகர சபையினால் வகுக்கப்பட்டுள்ள விசேட திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது கல்லூரி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அதிபர் உறுதியளித்தார்.

அத்துடன் குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்கான பைகளையும் மாநகர ஆணையாளரிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம். இஸ்ஹாக், மேற்பார்வையாளர் யூ.கே. காலிதீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :