கிழக்கு மாகாண மட்ட ரோபோ மற்றும் புதிய ஆக்கப்படைப்புக்கள் சாதித்த மட்டக்களப்பு மாணவர்கள்


அஸ்ஹர் இப்றாஹிம்-

ல்வி அமைச்சினால் நடத்தப்படுகின்ற அகில இலங்கை பாடசாலை ரோபோ தொழில்நுட்பம் மற்றும் புதிய ஆக்கப்போட்டித் தொடரின் கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாகாணமட்ட போட்டி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல பாடசாலை மாணவர்களின் கண்டுபிடிப்புக்கள் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்டன.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடையும் இச் சூழ்நிலையில் உலகம் ரோபோ தொழில் நுட்பம் புதிய கண்டுபிடிப்புக்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில் இத்துறைசார்ந்த அறிவு, திறன், நுட்பங்களை மாணவர்களிடம் வளர்த்தெடுத்து எதிர்கால வேலை உலகிற்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சானது இப் போட்டியினை வருடா வருடம் நடத்துகின்றது.

குறிப்பாக இப் போட்டித் தொடரானது ரோபோ தொழில்நுட்பம் தொடர்பான பிரிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் தொடர்பான பிரிவு என்கின்ற இரண்டு பிரிவுகளில் உற்பத்தித்தொழில் மற்றும் சுற்றுச்சூழல் கல்வித்துறை, கல்வித்துறை, பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்துறை, பொழுதுபோக்குத்துறை, சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் துறை என 5 துறைகளின் கீழ் நடத்தப்படுகிறது

நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை சேர்ந்த 8 மாணவர்கள் பங்கு பற்றி இருந்ததுடன் அதில் மட்டக்களப்பு, மண்முனை மேற்கு கன்னங்குடா மகா வித்தியாலய மாணவன் என்.கிரோஜன் புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவில் சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் துறையில் போட்டியிட்டு முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் , மட்டக்களப்பு ,மண்முனை மேற்கு வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவன் கே.கவிராஜ் ரோபோ தொழில்நுட்பம் தொடர்பான பிரிவில் கல்வித்துறையில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்

அத்தோடு மண்முனை மனைக்காடு ி மேற்கு விவேகானந்த மகா வித்தியாலய மாணவன் கே.டிபாணுஜன் புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவில் பொறியியல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தித்துறையில் 3 வது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதோடு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவன் கே.கபிலாஸ் புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவில் உற்பத்தித்தொழில் மற்றும் சுற்றுச்சூழல் கல்வித்துறையில் போட்டியிட்டு மெரிட் சான்றிதழையும் மகிழவட்டுவான் மகா வித்தியாலய மாணவன் பீ. ஜரோட்சன் ரோபோ பிரிவில் சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் துறையில் மெரிட் சான்றிதழையும் பெற்றதோடு 3 மாணவர்களுக்கு திறமைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதி கஷ்ட ,கஷ்ட பாடசாலைகளை மாத்திரம் உள்ளடக்கிய குறித்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து போட்டிக்கு சென்று பல்வேறு வசதிகளை உடைய ஏனைய பாடசாலை மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றதன் மூலம் குறித்த மாணவர்கள் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கும் அவர்களது பாடசாலைக்கும் பெருமையினை தேடிக்கொடுத்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :