உயிரியல் பூச்சிகொல்லி உருவாக்கத்திற்கான தொழில்நுட்ப உரிமத்தில் செண்டிப் ஓகானிக் ஹோல்டிங் நிறுவனத்துடன் தென் கிழக்கு பல்கலைக்கழகம் கையெழுத்திட்டது.



அஸ்ஹர் இப்றாஹிம்-

லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக இணைப்பு ( தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம்) செரண்டிப் ஓகானிக் ஹோல்டிங் நிறுவனத்துடன் தொழில்நுட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.என்.டீ.என்.குமார அவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட உயிரியல் பூச்சி கொல்லி உருவாக்கத்திற்கான தொழில்நுட்ப உரிமத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் முன்னிலையில் அண்மையில் கையெழுத்திடப்பட்டது.

இது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு வெற்றிகரமான ஒப்பந்தமாகும்.

பசுமை பூச்சி மேலாண்மையில் பல்கலைக்கழக தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதனை இச் செயற்பாடு நோக்கமாகக் கொண்டது.

நவீன அறிவு, நிபுணத்துவம், பயிற்சி, வணிகமாக்கல் முயற்சிகள், விவசாய செயன்முறைகளை மேம்படுத்துதல், மற்றும் விவசாயிகளின் பொருளாதார மட்டத்தை பிராந்திய மட்டத்தில் ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இது பெரிதும் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :