கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக பி.எம்.எஸ்.ஹுஸைனா முஜீப் கடமையேற்பு



எம்.ஏ.முகமட்-
தி/ கிண்ணியா அல் அக்ஸா தேசிய கல்லூரியின் பிரதி அதிபராக திருமதி பி.எம்.எஸ்.ஹுஸைனா முஜீப் தனது கடமை பொறுப்புக்களை (17) புதன் கிழமை ஏற்றுக் கொண்டார்.

அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தி யடைந்த இவர்,ஓய்வு பெற்ற அதிபர் பீர் முகமது என்பவரின் கனிஷ்ட புதல்வியும், ஏ .டபுள்யூ எம்.முஜீப் அதிபரின் பாரியாரும், கிண்ணியாவின் முதல் (CEO) முன்னாள் வட்டார கல்வி அதிகாரி இஷாக் சேரின் பேத்தியும், பொருளியல் விசேட துறை பட்ட தாரியும், பட்டப் பின் கல்வி டிப்ளோமோ என்பனவற்றை பூர்த்தி செய்ததுடன். இறுதியாக தி/கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பொருளியல் பாட சிரேஷ்ட ஆசிரியராக கடமையாற்றியவராவார்.

அல் அக்ஸா கல்லூரியின் ஆளணிக்கு ஏற்ப இரண்டு உதவி அதிபர்கள் மற்றும் ஒரு பிரதி அதிபர் ஆகிய வெற்றிடங்களில் , பிரதி அதிபர் பதவியை நிரப்பும் பொருட்டு பிரதி அதிபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :