ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்யக் கோரி அம்பாறையில் ஆர்ப்பாட்டம்.



எஸ்.அஷ்ரப்கான்-
ண்மையில் கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய கோரி பெருந்தொகையான கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களால் அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் மாபெரும் கண்டன பேரணி இன்று (14) இடம்பெற்றது.

இன்றைய தினம் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிப்பு குழுக் கூட்டம் அம்பாறை கச்சேரியில் நடைபெறுகின்ற நிலையில்,

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர எச்.எம்.எம் ஹரீஸிடம் ஆசிரியர்கள் இன்று நேரடியாக சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை எடுத்து வைத்தனர். அதனைக் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த விடயத்துக்கு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக உறுதி அளித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :