அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனைக் கிளையின் வருடாந்த ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் சனிக்கிழமை (06) மாளிகைக்காடு BAWA ROYALE RECEPTION மண்டபத்தில் இடம்பெற்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே, சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அன்பாஸ் பாறுக் ஆகியோரின் பங்கேற்புடன் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனைக் கிளைத் தலைவர் டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன், உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பின்வருவோர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனைக் கிளையின் புதிய நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர்
செயலாளர் டொக்டர் எப்.எம்.உவைஸ்
பொருளாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி
இணைத் தலைவர்களாக டொக்டர் ஏ.பி.மசூத் மற்றும் டொக்டர் என்.ரமேஷ்
உதவிச் செயலாளராக டொக்டர் வீ.சித்துரங்கன் மற்றும் டொக்டர் கே.இசுரு
ஆகியோர் முக்கிய பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment