அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனை கிளையின் தலைவராக டொக்டர் மாஹிர், செயலாளராக டொக்டர் உவைஸ் தெரிவு



ஆதிப் அஹமட்-
ரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனைக் கிளையின் வருடாந்த ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் சனிக்கிழமை (06) மாளிகைக்காடு BAWA ROYALE RECEPTION மண்டபத்தில் இடம்பெற்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே, சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அன்பாஸ் பாறுக் ஆகியோரின் பங்கேற்புடன் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனைக் கிளைத் தலைவர் டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன், உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பின்வருவோர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனைக் கிளையின் புதிய நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர் டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர்

செயலாளர் டொக்டர் எப்.எம்.உவைஸ்

பொருளாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி

இணைத் தலைவர்களாக டொக்டர் ஏ.பி.மசூத் மற்றும் டொக்டர் என்.ரமேஷ்


உதவிச் செயலாளராக டொக்டர் வீ.சித்துரங்கன் மற்றும் டொக்டர் கே.இசுரு 
ஆகியோர் முக்கிய பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :