கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இப்தார் நிகழ்வு!



மெட்ரோபொலிட்டன் கொலிஜ் மற்றும் ஈஸ்டன் கெம்பஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கல்முனையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களது தலைமையில் இப்தார் நிகழ்வு 2024.04.05 ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமாணி றவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் அஷ் செய்க் மௌலவி றியாஸ் அல் தாபி அவர்கள் கலந்துகொண்டு மார்க்க சொற்பொழிவாற்றினார்.

நிகழ்வின்போது கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உள்ளிட்ட பிரமுகர்களும் பிரதேச ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :