சாய்ந்தமருது அல்- அமானா நற்பணி மன்றத்தினால் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பும், வருடாந்த இப்தாரும்.



சாய்ந்தமருது அல்- அமானா நற்பணி மன்றத்தினால் தேவை உடையவர்களுக்கான உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வும் அமைப்பின் பொதுக்கூட்டமும், இப்தார் வைபகமும் அமானா நற்பணி மன்றத் தலைவர் ஏ.எல். பரீட் அவர்களின் தலைமையில் அல்- அமானா நற்பணி மன்ற சாய்ந்தமருது காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

பணத்தேவை உடையவர்கள், பெருநாளை கொண்டாட வசதியற்ற ஏழைகள், மற்றும் அங்கவீனர்கள், அனாதைகள், விதவைகள், வாழ்வாதாரம் இழந்தோர் எனப்பலருக்கும் பண உதவிகளை அல்- அமானா நற்பணி மன்றத்தினர் இதன்போது வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் உலமாக்கள், பிரதேச செயலக அதிகாரிகள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பிராந்திய சமூக சேவை அமைப்புக்களின் பிரமுகர்கள், சாய்ந்தமருது அல்- அமானா நற்பணி மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்தார் விசேட மார்க்க உரையை சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி எம்.ஐ.எம். ஆதம்பாவா (ரஷாதி) நிகழ்த்தினார்.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :