திருகோணமலை கோட்டக் கல்விப்பணிப்பாளராக சண்முகநாயகம் நியமனம்!



வி.ரி.சகாதேவராஜா-
திருகோணமலை வலயத்தின் திருகோணமலை கோட்டக்கல்வி பணிப்பாளராக செந்தில்வடிவேல் சண்முகநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை இந்து கல்லூரியில் பிரதி அதிபராக இருந்த இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தரத்தைச் சேர்ந்த சண்முகநாயகம் நேற்று முன்தினம் முதல் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி அவருக்கான நியமனக்கடிதத்தை கையளித்தார் .

36 வருட கல்வி சேவை அனுபவத்தைக் கொண்ட சண்முகநாயகம் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மற்றும் திருகோணமலை இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகளில் நீண்ட கால சேவையை ஆற்றியவராவார்.
எதிர்வரும் 2025 மார்ச் மாதத்தில் ஓய்வு பெறும் அவர் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் 1991/92 விஞ்ஞானத்துறையில் பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :