ஊஞ்சல் கழன்று விழுந்து சிறுவன் படுகாயம்; ஓட்டமாவடியில் சம்பவம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி சிறுவர் பூங்காவில் நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல் கழன்று விழுந்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்மவம் சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் குறித்த சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டுத் தொகுதிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

அதில், ஒன்றான மேல் நோக்கி சுற்றிவரும் ஊஞ்சலில் சிறுவர்களை ஏற்றி அங்கு கடமையில் இருந்தவர்கள் இயக்க வைத்துக் கொண்டிருந்த போது ஊஞ்சல் திடீரென கழன்று கீழே விழுந்துள்ளது.

இதில், காயமடைந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :