சாளம்பக்கேணி - 08, நாவிதன்வெளி பிரதேசத்தில் வசிக்கும் விசேட தேவையுடை குடும்பத்திற்கு குடி நீர் இணைப்பு ஒன்றைப் பெற்றுத் தருமாறு முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.நவாஸ் ஊடாக கல்முனை ரஹ்மத் பவுண்டேசனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்; ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்; கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் மூலம் குறிப்பிட்ட நீர் இணைப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த பயனாளர்கள், ஊர்மக்கள், பிரதேசவாசிகள் மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment