கோறளைப்பற்று மேற்கு அதிபர் சங்கத்தால் காஸா மக்களுக்கு சேகரிக்கப்பட்ட நிதி கையளிப்பு!



எச்.எம்.எம்.பர்ஸான்-
ஸ்ரேலிய ஸியோனிஸ இராணுவம் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதலில் பாதிப்படைந்துள்ள பலஸ்தீன - காஸா மக்களுக்காக ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேகரிக்கப்பட்ட நிதி செவ்வாய்க்கிழமை (9) கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத்தின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீரின் நெறிப்படுத்தலில் கோறளைப்பற்று மேற்கு அதிபர் சங்கத்தின் முயற்சியால் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மாணவர்களின் பங்களிப்பில் சுமார் 1719330 பதினேழு இலட்சத்தி பத்தொன்பதாயிரத்து முன்னூற்றி முப்பது ரூபாய் நிதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் ஊடாக கல்குடா ஜம்இய்யது உலமாவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத், கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ. அஜ்மீர், கல்குடா ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.தாஹிர் ஹாமி, செயலாளர் ஏ.எம்.இஸ்ஸத் நஹ்ஜி, அதிபர் சங்க தலைவர் என்.சஹாப்தீன், செயலாளர் எம்.சீ.எம்.அஜ்மீர், பொருளாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் உட்பட பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :