அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு கழகத்தின் தலைவர் ஜே. றுஜிகான் தலைமையில்அட்டாளைச்சேனை நிலாமியா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (02) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் ஆலோசகர் உப பொலிஸ் பரிசோதகர் யூ.எல்.ஆப்தின், திடீர் மரண விசாரனை அதிகாரி எஸ்.எம்.றுனைஸ், முகாமையாளர் எஸ்.சபீர் அலி அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக் கழக செயலாளர் ஏ.ஜி.இக்ராம், பொருளாளர் ஏ.பி.முபீன், உபதலைவர் ஏ.கே.அஜ்வத், உட்பட கழக வீரர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment