28 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் சாய்ந்தமருது ஏ.ஜி.ஏ. ஜாபிர்



சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சிறாப்பராக கடமையாற்றிய ஏ.ஜி.ஏ. ஜாபிர் அவர்கள் கடந்த முதல் (09-05-2024) தனது 28 வருடகால முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (சிறாப்பர்) சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவர் 1996.12. 02 ஆம் திகதி அம்பாரை மாவட்ட செயலகத்தில் சிறாப்பராக முதல் நியமனம் பெற்று, 12 ஆண்டுகள் கடமையாற்றி அதன் பின்னர் 2008.01.01 ஆந் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று அதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பின்னர் 2017.01.01 ஆந் திகதி முதல் மீண்டும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக (சிறாப்பராக) கடமையாற்றி வந்த நிலையில் தனது 28 வருடகால சேவையின் பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவ் உத்தியோகத்தரின் 28 வருட அரச சேவையைப் பாராட்டி கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைகளின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :