கல்முனை மாநகர மக்கள் வங்கி கிளை கட்டிடத்திற்கான நிரந்தர கட்டிடம் அமைக்க ஏலமனு கோரப்பட்டுள்ளது !



நூருல் ஹுதா உமர்-
லங்கையின் முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்றான கல்முனை மாநகர மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த மக்கள் வங்கி கிளை கட்டிடத்திற்கான தேவையறிந்து திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீ.ல.மு.கா. பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக கட்டிட நிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ள மக்கள் வங்கி தலைமையகத்தினால் ஏலமனு கோரப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடமும், மக்கள் வங்கி தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இடம்பெற்ற ஆலோசனைகளின் பேரில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்க முன்னாயத்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்த இந்த வங்கிக் கிளை கட்டிடத்தொகுதி அமைப்பது தொடர்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மக்கள் வங்கி தவிசாளரை சந்தித்து கல்முனை மாநகர பொதுமக்களும், வர்த்தகர்களும் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்களை எடுத்துரைத்து துரித கதியில் இந்த கட்டிடம் அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தியிருந்தார். அன்றே இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க தேவையான நிதியை அன்றே அவர் ஒதுக்கீடு செய்திருந்த நிலையில் இப்போது அந்த கட்டிடத்தை நிர்மாணிக்க விலைமனு கோரப்பட்டுள்ளது.

இந்த வங்கிக் கிளை நிரந்தர கட்டிடத்தில் கல்முனை மாநகரில் அமைய இருப்பதனூடாக கல்முனை மாநகர மக்கள் மற்றும் வர்த்தகர்கள் முழுமையாக நன்மை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :