இரசாயனத்தை குறைத்து உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
னாதிபதியின் துரித உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தில் சிறந்த விவசாய நடைமுறைகளின் கீழ் மரக்கறி பயிர்ச் செய்கையில் இரசாயனத்தை குறைத்து உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வுகள் மாவட்டம் தோறும் இடம் பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் பிரதேச செயலகம் தோறும் விழிப்புணர்வு செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி 03ம் வட்டாரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று சனிக்கிழமை முழு நாளும் இடம் பெற்றது.

சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு பொறுப்பான உத்தியோகத்தர் எச்.எம்.றியால் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், உதவி விவசாய பணிப்பாளர் ஈ.சுகுந்ததாசன், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், மட்டக்களப்பு மத்தி வலய உதவி விசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இரசாயான பாவனையை குறைப்பதன் மூலம் மரக்கறிகளின் கேள்விகளை அதிகரிக்க செய்வதுடன் நஞ்சற்ற பொருட்களை மக்கள் பாவனைக்கு வழங்க முடியும் என்றும் நிலப்பற்றாக்குறையான பிரதேசத்தில் பொதிப்பயிர் செய்கையைமேன்படுதர்துவதன் மூலம் பயிர் உற்பத்தியினை அதிகரிப்பதன் ஊடாக பொருனாதார அபிவிருத்தியில் அபிவிருத்தியையும் ஏற்படுத்தலாம் என்று மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தெரிவித்தார்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :