கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸதீன் மற்றும் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோர் கோமாரி வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலைகளின் நிலைமைகளை பார்வையிட்ட பணிப்பாளர் அவ் வைத்தியசாலையின் தேவைகள் குறித்தும் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
தற்போது குடிநீர் பிரச்சினை உள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்து தருமாறும் பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஊழியர்கள் கேட்டுக்கொண்டதனையடுத்து பணிப்பாளர் அவர்கள் உடனடியாக அப்பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment