முஷாரப் எம்.பி.யின் நிதியில் அந்நூர் பாலர் பாடசாலைக்கு புதிய கட்டிடம்.!





ஏயெஸ் மெளலானா-
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள மாவடிப்பள்ளி அந்நூர் பாலர் பாடசாலையின் புதிய) கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் காரைதீவு உப பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி. ராஜகுலேந்திரன், மாவடிப்பள்ளி ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அப்துல் மனாப் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது பள்ளிவாசல் பேஷ் இமாம் எம். பாரிஸ் மெளலவி விசேட துஆப் பிரார்த்தனையை மேற்கொண்டார்.

மாவடிப்பள்ளி அந்நூர் பாலர் பாடசாலைக்கென கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி அதன் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் இணைப்பாளர் அஸாம் அப்துல் அஸீஸ் மெளலவி மேற்கொண்ட முயற்சியின் பயனாக அவர் இக்கட்டிட நிர்மாணத்திற்காக தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து 10 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :