விநாயகபுரம் விநாயகர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு நேர மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களை பிரதி நிதித்துவப்படுத்திய 60 விளையாட்டு கழகங்கள் பங்கேற்றிருந்தன.
அட்டாளச்சேனை சோபர் விளையாட்டுக் கழகமும் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டு கழகமும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய விநாயகர் விளையாட்டு கழகம் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் 45 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டு கழக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மிக இலகுவான முறையில் இறுதிப் போட்டியை எவ்விதமான விக்கெட் இழப்பின்றி வெற்றிவாகை சூடினார்கள் .
வெற்றி பெற்ற சம்பியன் அணியினருக்கு பதக்கங்கள் அணிவித்து கௌரவப்படுத்தியும் முதலிடத்தை பெற்றதற்கு 60,000 ரூபாய் பண பரிசும் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment