சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட ஏற்பட்டிருந்த பாரிய கடலரிப்பைத் தடுப்பதற்கு கரையோரம் பேணும் திணைக்களத்தின் கண்காணிப்பில் கடலோரங்களில் பாரிய முட்டுக் கற்கள் போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது கடலரிப்பு தடுக்கப்பட்டு தமது தொழிலைச் செய்வதற்கு தற்போது சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆழ்கடல் மற்லும் கரைவலை மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருது கடலோரங்களில் பாரிய பாறாங் கற்கள் போடும் நடவடிக்கைகளினால் கடலரிப்புக்குள்ளான கரையோரத்தில் உள்ள இடங்கள் தற்போது கடல் மண் வார்த்து சற்று விரிவாக காணப்படுகின்றது.
ஏற்கனவே ஆரம்பத்தில் போடப்பட்டு தற்போது மணலால் மூடப்பட்டுள்ள பாரிய பாறாங் கற்களை தோண்டி எடுத்து போடப்பட்டுள்ள கல் அணையை மேலும் விஸ்தரிப்பதன் மூலம் இப்படியான மணல் நிறைந்து காணப்படும் பகுதிகளில் மேலும் மணல் நிறைந்து கடற்கரை பகுதியை விரிவாக்கலாம் என கடற்தொழிலாளர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment