பாரிய கடலரிப்பை எதிர்கொண்ட சாய்ந்தமருது கடலோரம் தற்போது பாறாங்கற்கள் போடப்பட்டு மண் வார்த்து பழைய நிலமைக்கு மீண்டுள்ளதால் கரைவலை மீனவர்கள் பெரு மகிழ்ச்சி



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட ஏற்பட்டிருந்த பாரிய கடலரிப்பைத் தடுப்பதற்கு கரையோரம் பேணும் திணைக்களத்தின் கண்காணிப்பில் கடலோரங்களில் பாரிய முட்டுக் கற்கள் போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது கடலரிப்பு தடுக்கப்பட்டு தமது தொழிலைச் செய்வதற்கு தற்போது சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆழ்கடல் மற்லும் கரைவலை மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருது கடலோரங்களில் பாரிய பாறாங் கற்கள் போடும் நடவடிக்கைகளினால் கடலரிப்புக்குள்ளான கரையோரத்தில் உள்ள இடங்கள் தற்போது கடல் மண் வார்த்து சற்று விரிவாக காணப்படுகின்றது.

ஏற்கனவே ஆரம்பத்தில் போடப்பட்டு தற்போது மணலால் மூடப்பட்டுள்ள பாரிய பாறாங் கற்களை தோண்டி எடுத்து போடப்பட்டுள்ள கல் அணையை மேலும் விஸ்தரிப்பதன் மூலம் இப்படியான மணல் நிறைந்து காணப்படும் பகுதிகளில் மேலும் மணல் நிறைந்து கடற்கரை பகுதியை விரிவாக்கலாம் என கடற்தொழிலாளர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :