பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்வு பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.லசந்த பண்டார மற்றும் பொலிஸ் நிலைய உத்தியோஸ்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த அன்னதான நிகழ்வில் வீதியால் பயணித்த பொதுமக்கள் இந்த அன்னதானத்தைப் பெற்றுக் கொண்டனர்.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜெமீல் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த அன்னதான நிகழ்விற்கு பிரபல சமூகசேவையாளர் காராள சிங்கம் சகாதேவா அனுசணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment