சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திற்கு றஹுமத் பெளண்டேஷன் அமைப்பினால் மாணவர்களுக்கான குடிநீர் விஸ்தரிப்பும் குழாக் கிணறும் திறந்து வைப்பு



எம்.எம்.ஜெஸ்மின்-
பாடசாலையின் தேவை கருதி பாடசாலையின் சமுகத்தின் வேண்டுகோளினை ஏற்று மாணவர்களுக்கான குடிநீர் விஸ்தரிப்பு மற்றும் குழாய்க்கிணறு தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு றஹ்மத் பெளண்டேசன் அமைப்பின் தலைவரும் ,முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான றஹுமத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானியர் மேதகு பட்லி ஹிஸாம் ஆதம் தமது பாரியார் சகிதம் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந்திகழ்வில் றஹ்மத் மன்சூர் அமைப்பின் தலைவர் றகுமத் மன்சூர் அவர்களும் அமைப்பின் உறுப்பினர்களும், YWMA அமைப்பின் தலைவி .திருமதி பவாசா தாஹா அவர்களும் மற்றும் அமைப்பின் செயலாளர்,பொருளாளர் ,முன்னாள் தலைவர் ,அமைப்பின் ஏனைய அங்கத்தவர்கள் ,பிரதி அதிபர்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ,மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :