காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு செல்லும் கார்பட் வீதியில் தோணா ஆற்றுக்கு மேலாகவுள்ள பாலம் பழுதடைந்து பல வருடமாகியும் இதுவரை திருத்தப்படாமல் இருப்பது எதிர்காலத்தில் பாரிய அனர்த்தமொன்றை ஏற்படுத்தலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதி கார்பட் வீதியாக புனருத்தானம் செய்யப்பட்ட போது இது விடயமாக பலர் எடுத்துரைத்தும் அதனையும் பொருட்படுத்தாமல் இவ் வீதி செப்பனிடப்பட்டது.
இவ் வீதியின் மேலாக கனரக வாகனங்கள் செல்லும் போது இப் பாலத்தில் அதிர்வை அதிர்வை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
எனவே,சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் இப்பாலத்தை திருத்தி இப்பாலத்தினூடாக பயமின்றி பயணிக்க உதவுமாறு மக்கள் கேட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment