ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பில் ஜனசாத் தொழுகை!



அஷ்ரப் ஏ சமத்-
டந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகொப்டர் விபத்தில் அஜர்பைசான் எல்லையில்அகால மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸ் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஏனையவர்களுக்கும்

கொழும்பு 2 கொம்பனி வீதியில் உள்ள் வேகந்த ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஜனசாத் தொழுகையும் துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஈரான் நாட்டின் இலங்கைத் துாதுவர் ஆலயத்தின் சாஜிடி அபயார் கொழும்பு ஈரான் கலாச்சாரப் நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி பஹ்மன் மொசாமி ஈரான் சார்பாக கலந்து கொண்டு ஜனாசாத் தொழுகையிலும் கலந்து கொண்டார்
இந் நிகழ்வில் ஜனாசாத் தொழுகையை மௌலவி மௌலானா நசீர் புஹாதீன் துஆப் பிராத்தனையை மின்ஹாஜ் அமீர் மனாஹிப் மொளலவி நிகழ்த்தினார்கள். இந் நிகழ்வில் பள்ளிவாசல் பரிபலான சபைத் தலைவர் மற்றும் செயலாளர் இப்பிரதேச வாழ் மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :