மினுவாங்கொடை உடுகம்பொல செனரத் பரணவிதான தேசிய பாடசாலையின் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது. அங்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான 02 ஸ்மார்ட் பலகைகள் (Smart Board) பாடசாலைக்கு வழங்கப்பட்டதுடன் அதற்காக செலவிடப்பட்ட தொகை 13.5 இலட்சம் ரூபாவாகும்.
அதேநேரம், அந்த பாடசாலையில் கல்வி கற்கும் 50 பிள்ளைகளுக்கு 2.5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய பாடசாலைக் காலணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீட்டுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் மினுவாங்கொடை கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment