எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கறுவாட்டுக்கல் 3 சம்மாந்துறை மகளிர் அமைப்பினருடனான கலந்துரையாடல் நிகழ்வு.



திர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கறுவாட்டுக்கிகல் 3 மகளிர் அமைப்பினருடன் நாபீர் பவுண்டேஷன் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வு குறித்த பிரதேசத்திற்கான மகளிர் அமைப்பின் தலைவி பழிலா தலைமையில் அல்மர்ஜான் பாடசாலை அருகாமையில் நேற்று நடைபெற்றது.
குறித்த ஒன்றுகூடல் நிகழ்வில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் தொழிலதிபருமான கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்கள் களமிறங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் கருத்துகளும் கேட்டறியப்பட்டது இந் நிகழ்வில் கலந்து கொண்ட மகளிர் அமைப்பினர் கடந்த காலங்களில் நாபீர் பவுண்டேஷன் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், தொடர்ச்சியான மக்கள் பணிக்கு பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்களின் அரசியல் வருகையை வரவேற்பதாகவும் கருத்துக்களை தெரிவித்தனர்.

அத்தோடு பொறியாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் பட்சத்தில் தங்களது முழு ஒத்துழைப்புகளையும் மகளிர் அமைப்பின் ஊடாக வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :