எல்ல மற்றும் ஊவா பரணகம உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்த்தனர்.



துளை மாவட்டத்தின் ஊவா பரணகம மற்றும் எல்ல பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டனர்.

இதன் பிரகாரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எல்ல பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த நிமல் ரஞ்சித் வீரசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான சமந்த கபில ரத்நாயக்க, ஹேமாவதி குமாரிஹாமி மற்றும் பாரத ரணசிங்க ஆகியோர் இவ்வாறு இணைந்து கொண்டனர்.

அதேபோன்று எல்ல பிரதேச சபையின் சுயேச்சை உறுப்பினராக இருந்த பி. சுரேஷ் போலவே, ஊவா பரணகம பிரதேச சபையின் உப தவிசாளர் ஆர்.டி.குணபால, உறுப்பினர் டி.எம்.கருணாதாச மற்றும் ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் டி.ஐ.ரத்னபால ஆகியோரும் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :