50 லட்சம் ரூபாய்கள் நிதி ஒதுக்கீட்டில் மாவடிப்பள்ளி கலாச்சார மண்டப புனர்நிர்மான பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, மாவடிப்பள்ளி பள்ளிவாசல்களின் தலைவர் வை.வி.ஏ. மனாப் தலைமையில் கலாச்சார மண்டப வளாகத்தில் 2024.06.14 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினரின் சாய்ந்தமருது மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசங்களின் இணைப்பாளர் ஏ.எம். அஷாம் மெளலவி அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், தன்னை தாங்களது பிரதிநிதியாக மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியதன் பலனை மக்கள் அனுபவிக்கும் காலம் ஆரம்பித்துள்ளதாகவும் தன்னால் முடிந்தவரை மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய தன்னாலான அத்தனையையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அஷாம் மெளலவி, மாவடிப்பள்ளியின் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் 2400 வாக்குகளையே கொண்டுள்ள இந்த ஊருக்கு அதிகப்படியான நிதியை ஒதுக்கி சாதனை படைத்துள்ளதாகவும் இதற்கு மேலதிகமாக பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் குறிப்பாக பள்ளிவாசல் விடயத்தில் இருந்து வந்த இழுபறி நிலையை போக்கிவைத்ததாகவும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உதவித்தலைவரும் ஜாஹீர் பௌண்டேசன் மற்றும் சமூக அபிவிருத்தி சபையின் ஸ்தாபக தலைவருமான ஏ.எம். ஜாஹீர், மாவிப்பல்லிவாசல்களின் செயலாளர் ஏ.எம்.பௌமி மற்றும் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment