ஹஜ்ஜுப் பெருநாள் தின கவியரங்கு நிகழ்வு ( 21) வெள்ளிக்கிழமை தி/ கிண்ணியா அல்ஹாஜ் அல் எகுத்தார் வித்தியாலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கிண்ணியா முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் எழுத்தாளருமான பிச்சைத்தம்பி அப்துல் அஸீஸின் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் ஏ.கவிமணி கௌரிதாசன் அறிமுகத்தினையும்,கவிஞர் ஏ.எம்.கஸ்புள்ளா நன்றியுரையையும் ,எழுத்தாளர் பி.ரீ.ஏ.அஸீஸ் தொகுப்புரையையும் வழங்கினர்.
இக் கவியரங்கில் கவிஞர் ஏ.எம்.ஏ.றசூல், ஊடகவியலாளர் எம்.ஏ.முகமட் ,எழுத்தாளர்களான முகைமினா மூஸா ,கிண்ணியா சபீனா,மற்றும் பாத்திமா சிபா ஆகியோர் ஹஜ் கவி மழை பொழிந்தனர்.
இந்நிகழ்வில் ஜாஹுவப் பள்ளிவாயல் தலைவர் ஏ.எஸ்.எம்.யுனைதீன்,எகுத்தார் வித்தியாலய அதிபர் ஏ.எஸ்.எம்.உவைஸ்,கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.
0 comments :
Post a Comment