ஏறாவூர் அல் அஸ்ரப் வித்யாலயத்தின் அருகாமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏறாவூர் பற்று செயற்பாட்டு அலுவலகம்!



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
க்கிய தேசியக் கட்சியின் ஏறாவூர் பற்று செயற்பாட்டு அலுவலகம் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது வலய அமைப்பாளர் எம் ஐ. பாறூக் தலைமையில் ஏறாவூர் அல் அஸ்ரப் வித்யாலயத்தின் அருகாமையில் திறக்கப்பட்ட அலுவலகத்தின் நிகழ்வில் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைப்பாளர் எம் ஐ. பாறூக், நாட்டை பொருளாதார சரிவிலிருந்து மீட்டெடுத்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க . மூலமே மேலும் சுபிட்சத்தின்பால் கொண்டு செல்ல முடியும். வங்குரோத்து நிலையில் இருந்த அரச நிதி கையிருப்பு இன்று பல மில்லியன் அமெரிக்க டொலர்களால் நிறைந்துள்ளது . வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது . அரச ஊழியர்களுக்கான சம்பளம் கூடியுள்ளது. பொருட்களின் விலைகளை படிப்படியாக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் நன்மை கருதி அஸ்வசும திட்டத்தின் மூலம் 24 இலட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் கல்வியினை முன்னேற்றுவதற்கும், வேலையில்லா இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், நாட்டு மக்களின் நன்மைக்காக சிறந்த பல திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகின்றார் என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :