பொசன் தினத்தினை முன்னிட்டு சடயந்தலாவை ஸ்ரீ சம்போதி றுக்காராமய விகாரைக்கு நிறப்பூச்சு -சவளக்கடை பொலிஸாரின் முன்மாதிரி



பாறுக் ஷிஹான்-
பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல விஹாரைகள் நிறப்பூச்சு பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.இந்த வேலைத்திட்டங்களை பல்வேறு அமைப்புகள் பொறுப்பேற்று செய்து வருகின்றன.அவ்வாறே அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை ஸ்ரீ சம்போதிறுக்காராமய விகாரையை புனரமைக்கும் வேலைப்பாடு மற்றும் நிறப்பூச்சு பூசுகின்ற செயற்பாட்டினை சவளக்கடை பொலிஸ் நிலையம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எம்.எஸ்.கே தசநாயக்க ஆலோசனையில் குறித்த விகாரையில் இன்று சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு பொசன் தினத்தினை வரவேற்கும் முகமாக பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்குறித்த செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் சவளக்கடை பொலிஸாருக்கு அவ்விகாரையின் பிரதம விகாராதிபதி தனது நன்றிகளை தெரிவித்துள்ளதுடன் தன்சல் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை பொதுமக்களுடன் இணைந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :