பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு



ஹஸ்பர் ஏ.எச்-
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகிய, தந்தையை இழந்த மாணவர்களுக்கு கல்வியை தொடரப் பணவசதி அற்ற மாணவர்களுக்குமாக மொத்தம் 64 மாணவர்களுக்கு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் இன்று(21), மூன்று மாதத்துக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் .கதிரவேலு சண்முகம் குகதாசன், செயலாளர் கணபதிப்பிள்ளை சிவானந்தன் ஆகியோர் இதற்கான காசோலைகளை திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தனர்.
இதற்கான நிதி உதவியைக் கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் கல்வியின் முதன்மை பற்றியும் எதிர்காலத்தில் மாணவர்கள் ஆற்ற வேண்டிய சமூகப் பணிகள் பற்றியும் மாணவர்களுக்கு இதன் போது எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :