பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களின் விகிதாசாரத்தை குறைப்பதே எனது இலக்கு.- கலாநிதி உதுமான்கண்டு நாபீர்.



மது பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் அடங்குபவர்களின் விகிதாசாரம் அதிகரித்துச் செல்கின்றது. இவ்வாறான நிலை மிகவும் ஆபத்தானது. இதனைக் குறைப்பதற்காக நாங்கள் விரைந்து செயற்பட வேண்டியுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களும் என்னிடம் இருக்கின்றன என, நாபீர் பவுண்டேஷனின் தலைவரும் சமூக சிந்தனையாளரும் பொறியியலாளருமான அல்ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்.

நாபீர் பவுண்டேஷனின் சம்மாந்துறை பிரதேச மகளிர் சங்கங்களின் தலைவிகளுடனான விஷேட சந்திப்பு ஒன்று சம்மாந்துறை ஈ.சி.எம். நிறுவன கூட்ட மண்டபத்தில் 2024.06.15 ஆம் திகதி இடம்பெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்தபோதே பொறியலாளர் நாபீர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டார். எங்களது பிரதேசங்களுக்கு சுற்றுலா அடிப்படையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வருகிறார்கள் அவர்களின் கவர்ச்சியான வார்த்தைகளுக்கு எங்களது மக்கள் அடிமையாகி அவர்கள் கூறும் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள் அதனூடாக அவர்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள் மக்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள்.

இவ்வாறான நிலை மாறவேண்டும் அரசியல் கட்சிகள் என்பது வேதமும் இல்லை. மக்கள் இப்போது யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள் தங்களது பிரச்சினைகளில் அக்கறையுள்ள தங்களது பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

நான், நமது பவுண்டேஷன் ஊடாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் எவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் இவ்வாறான நிலை நீடிக்க வேண்டும் என்னிடம் நமது மக்கள் எத்ர்பார்க்கும் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன அவைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக மக்கள் அங்கீரம் எனக்குத் தேவை அவ்வாறு குறித்த அங்கீகாரம் கிடைக்குமாக இருந்தால் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நமது இலக்கை அடைந்து கொள்ள முடியும் என்றும் இதற்கான நிதியை வெளிநாடுகளில் இருந்தும் தன்னால் கொண்டுவர முடியும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது மகளிர் சங்கங்களில் தலைவிகளுக்கு ஹஜ்ஜுப் பெருநாளுக்காக உடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
 












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :