காத்தான்குடியிலிருந்து சென்ற லொறி புனாணை தொழிநுட்ப பல்கலைக்கழகத்திற்கு முன்பாக விபத்தில் சிக்கியது!



எம்.ஏ.ஏ.அக்தார்-
நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புணானை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பகுதியிலிருந்து பொலன்னறுவை நோக்கி நெல் மூடைகளை ஏற்றி சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு வழி விடும்போது லொறி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
விபத்தில் லொறிக்கு சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் பயணித்த சாரதியும் நடத்துனரும் காயங்களின்றி தப்பியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :