திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள டி- 100 வேலைத்திட்டத்தினூடாக முதற்கட்டமாக 65 மில்லியன் நிதியில் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ளது.
கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.கலீல் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் இசட்.ஏ.எம் அஸ்மீர்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம காரியாலய பொறியியலாளர் எம்.ஐ.எம் ரியாஸ்,கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஜே .ஜெளஸி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர் அமீர் எம்.ஐ.எம்.பிர்தெளஸ்,ஏ.ஏ.பஸீர்,எம்.எஸ்.எம் நவாஸ்,காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம் ரனீஸ்,எம்.எச்.எம்.இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ பாவா, பாராளுமன்ற உறுப்பினரின் ஏனைய துறைசார் இணைப்பாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்தியக்குழுவினர், வட்டார அமைப்பாளர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment