மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா ஏற்பாட்டில் 450 மில்லியனில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை விஸ்தரிப்பு.



எம்.எம்.ஜெஸ்மின்-
சீன நாட்டு அரசாங்கத்தி;ன் நிதியுதவியுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கென பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் கட்டடத் தொகுதியின் முதற்கட்டம் முடிவுற்ற பகுதியினை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளின் பேரில் இக்கட்டத்தினை நிருமாணிப்பதற்கென கடந்த நல்லாட்சி காலத்தில் 450 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நவீன வசதிகள் கொண்ட சத்திர சிகிச்சைக்கூடம், இரத்த வங்கி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மருத்துவ விடுதி போன்ற வசதிகள் இக்கட்டடத்தில் உள்ளடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வருண சம்பத் பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என். சிவலிங்கம், மாகாண பணிப்பாளர் டாக்டர் டிஜிஎம். கொஸ்தா, பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரலீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :