திரு சி.ஜெகதீஸ்வரன் திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 46 ஆவது தலைவராக பதவியேற்பு நிகழ்வு



திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 46 ஆவது தலைவராக
திரு சி ஜெகதீஸ்வரன் அவர்கள் பதவி ஏற்க்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் 06.07.2024 சனிக் கிழமை அன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு டெபெஞ்சான் முக்ஹர்ஜி (.Debenjan Mukhergy ) லங்கா ஐ ஓ சி யின் மூத்த துணைத் தலைவர் கலந்து கொண்டார். இவர்களுடன் ரோட்டரி உதவி ஆளுநர் ஜெயபால சந்திரன் (JB) அவர்களும், வத்தலை, யாழ்ப்பாணம், அம்பாறை, கல்முனையை சேர்ந்த ரோட்டரி அங்கத்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் மருத்துவர் ச. சௌந்தரராஜன் கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயல் பட்டதாகவும் அதற்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்.

சமீபத்தில் கொழும்புவில் நடைபெற்ற ரோட்டரி மாநாட்டில் சிறந்த பொதுசன தொடர்பு தலைவராக தெரிவு செய்யப் படட வைத்திய கலாநிதி E. G. ஞானகுணாளன் மற்றும் சிறந்த உதவி ஆளுநர் திரு. ரகுராம் அவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப் படடார்கள்.

செயலாளர் ரகுராம் 2023 - 2024 ஆண்டில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.
இவ் நிகழ்ச்சியில் இன்டராக்ட் கழக செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.
. இதன் போது கடந்த ஆண்டின் தலைவர் மருத்துவர் ச. சௌந்தரராஜன் புதிதாக தெரிவான தலைவர் திரு சி. ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..

புதிய அங்கத்தவராக திரு. சுபராஜ் இணைத்துக் கொள்ளப்படார்.

லங்கா ஐ ஓ சி யின் சார்பில் ரூபா 360,000/= மான்களின் சரணாலய உணவு தேவைக்கு வழங்கப் பட்டது.

பிரதம விருந்தினர் திரு டெபெஞ்சான் முக்ஹர்ஜி (.Debenjan Mukhergy ) அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். மற்றும் திருகோணமலை மக்களின் அவசர தேவைகள் ஏற்படும்போது தாங்கள் உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறினார். அடுத்த செயலாளராக தெரிவு செய்யப்படட திரு ரவிச்சந்திரன் நன்றியுரையை நிகழ்த்தினார்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :