மட்டக்களப்பு மத்திவலய கல்விப்பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் தலைமையில் இன்று 2024.07.18 ஆம் திகதி ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இன்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மத்திவலய கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் ரீ.எம்.எஸ். அஹமட் மற்றும் மூன்று கோட்டத்துக்கு பொறுப்பான கோட்டக்கல்வி அதிகாரிகளும், உதவிக் கல்விப்பணிப்பாளர்களும், ஆசிரிய ஆலோசகர்களும், அதிபர்களும், கலந்து கொண்டதோடு போட்டி நிகழ்வுகளில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கேடயமும் வழங்கப்பட்டது.
மெய்வல்லுனர் போட்டியில் அதிகூடிய புள்ளியைப்பெற்று முதலாம் இடம் ஏறாவூர் அல்.அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையும், மூன்று கோட்டங்களிலும் கூடிய புள்ளியைப் பெற்று 2024ம் ஆண்டு சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கோட்டமாக ஏறாவூர் கோட்டம் தெரிவு செய்யப்பட்டது.
0 comments :
Post a Comment