ஹாஷிம் உமர் பௌண்டேசனின் இரண்டாம் கட்ட மடி கணனிகள் விநியோகம்!



ஹாஷிம் உமர் பௌண்டேசன் பல்வேறு சமூக சமயப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் தேவையுடைய மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்விக்கு கைகொடுப்போம் என்ற திட்டத்தை யும் முன்னெடுத்துள்ளது.

அதற்கிணங்க அதன் முதல் கட்ட விநியோகப் பணி கடந்த ஜூன் மாதம் 07 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இரண்டாம் கட்ட விநியோகம் ஜூலை 12 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி யிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகருமான புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மடி கணனி பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்தவர்களுள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேருக்கு புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் மடி கணினிகளை வழங்கி வைத்தார்.
இதன் போது செல்வன் ஜெ.ஏ.முஹம்மட் -வெல்லம்பிட்டி,செல்வன் அ.ஹம்தான்-கல்முனைக்குடி,செல்வி ஜே.சிவகுமார்- வெள்ளவத்தை, செல்வி எம்.ஐ.எம்.ராதியா-அம்பாறை சென்றல் கேம்ப், செல்வி ஜே.ரி.பிரிய தர்ஷினி -தெரணியகலை ஆகியோர் மடி கணினிகளைப் பெற்றுக் கொண்டனர்.

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் பொதுச் செயலாளர் ஏ.எம்.ஜெளபரின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, சமூகஜோதி ரபீக், தொழிலதிபர் வாஜித், இம்போட் மிரர் பிரதம ஆசிரியர் எம்.வை. அமீர்,உலமாக் கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :