சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர்கள் நாபீர் பவுண்டேஷனோடு இணைந்து செயல்பட முடிவு.



எம்.ஏ.ஏ.அக்தார்-
நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் சமூகம் சார்ந்த செயல்பாடுகளையும், இளைஞர்களின் விடயத்தில் முன்னெடுத்து வருகின்ற வேலை திட்டங்களையும் அண்மைக்காலமாக அவதானித்து வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை காலமும் இணைந்து செயற்பட்ட சாய்ந்தமருது இளைஞர்கள் பலர் அக் கட்சியிலிருந்து விலகி தற்போது பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அண்மையில் சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னா வித்யாலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது குறித்து இளைஞர்கள் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டனர்.

அத்தோடு எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பொறியலாளர்கள் உதுமான் கண்டு நாபீர் அவர்கள் களமிறங்க தயாராக உள்ளதால் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கவுள்ளதாகவும், சாய்ந்தமருதுக்கான நாபீர் பவுண்டேஷன் இளைஞர் அமைப்பை உருவாக்குவதற்கான அனுமதியையும் சாய்ந்தமருது இளைஞர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :