சாய்ந்தமருதில் இரத்ததான முகாம்!



USF Sri Lanka சமூகசேவை அமைப்பின் 09 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு MYOWN EDUCATION AID அனுசரணையுடன் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் அமைப்பின் ஸ்தாபக தலைவருமாகிய அ.கபூர் அன்வர் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மயோன் முஸ்தபா கல்வி திட்டம் மற்றும் சமூக அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபாவும் கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப். ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் வழங்கப்பட்ட இரத்தங்களை சேகரித்துக்கொண்டனர்.












 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :