வீழ்ந்து கிடந்த நாட்டை மீட்டெடுத்தவர் எங்கள் ஜனாதிபதி! பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்!!



-தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன்-

ரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்குண்டு தவித்துக்கொண்டிருந்த நமது நாட்டை, தனியாகவந்து மீட்டெடுத்து நாளுக்குநாள் முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லும் ஜனாதிபதி அவர்கள் கடந்த 65 நாட்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வைத் தர முன்வரவேண்டும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டம் 65 நாட்களையும் தாண்டி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய தினம் (2024.07.04) தென்கிழக்கு பல்கலைக்கழக முற்றலில் ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் இவ்வாறு தெரிவித்தார்.

வங்குரோத்தடைந்திருந்த நாட்டை மீட்ட ஜனாதிபதி அவர்கள், பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்திருக்கும் பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விரைந்து தீர்வைப் பெற்றுத்தர முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பல்கலைக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக கடந்த 65 நாட்களுக்கு மேலாக பல்கலைக்கழகங்கள் மூடிக் கிடக்கின்றன. அதன்காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இவைகள் தொடர்பிலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனத்தில் எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகம்மது காமில், நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை என்றும் எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

ஒரே நிறுவனத்தின் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி தந்து, அரசு ஏமாற்றி வருகின்றது. எங்களது விடயத்தில் அரசு பாகுபாடாக நடந்துள்ளது. அப்பட்டமான உண்மை என்றும் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக கட்டமைப்பில் பட்டதாரிகளை உருவாக்குவதில் கல்விசாரா ஊழியர்களின் பங்கு என்பது பிரதானமான ஒன்று. இவ்வாறான சூழலில் மாணவர்கள் கூட கருத்து எதனையும் கூறவில்லை என்றும் கல்விசார் ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்களின் விடயத்தில் பாராமுகமாக இருப்பது கவலையாளிப்பதாகவும் தெரிவித்தார்.

நாங்களும் பல்கலைக்கழக செயற்பாட்டுக்கு பங்களிப்பவர்கள் என்பதை குறித்த தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும். அத்துடன் எங்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசுக்கு அனைவரும் அழுத்தங்களை பிரயோகிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :