கண்ணகி கிராமத்தின் மாதர் சங்க பாலர் பாடசாலையின் பெயர் பலகை திறந்து வைப்பு...



காரைதீவு ர் சகா-
தி கஸ்ரப்பிரதேசமான அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் இயங்கி வரும் மாதர் சங்க பாலர் பாடசாலைக்கு தேவையான பெயர் பலகையையும் இரண்டு ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும்.கல்வி கற்கும் (20) மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் இணைந்த கரங்கள் அமைப்பு வழங்கி வைத்துள்ளது.

பாடசாலை சமுகத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இணைந்த கரங்கள் உறவுகளோடு இணைந்து பயணிக்கும் திரு,தருஷன்,புவனேஸ்ராஜா அவருடைய நிதி பங்களிப்பில் மாதர் சங்க பாலர் பாடசாலையின் இரண்டு ஆசிரியர்களுக்கு மாதாந்தம்(Rs:8000)ரூபாவும், (20) மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும், பாடசாலைக்கு தேவையான பெயர் பலகையும் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பெயர்ப் பலகை முன்பள்ளி வெளிக்கள உத்தியோகத்தர் பி. மோகனதாஸ், கண்ணகி வித்தியாலய அதிபர் த.இராசநாதன், கண்ணகி கிராமம் சமூக சேவையாளர் கோகுலன் ஆகியோருடன் இணைந்த கரங்கள் உறுப்பினர்களான காந்தன். சுரேஸ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :