ஓட்டமாவடி நபர் கம்போடியாவில் மரணம்!



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 2 ஆம் வட்டாரம் ஜீ.எஸ்.வீதியைச் சேர்ந்த நபரொருவர் கம்போடியா நாட்டில் மரணமடைந்துள்ளார்.

தொழில் நிமித்தம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து சென்ற இவர் வியாழக்கிழமை (11) மரணமடைந்துள்ளார்.

தனது அறையில் இருந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்த தகவல் கம்போடியா நாட்டிலிருந்து தமக்கு கிடைத்ததாக மரணமடைந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாறு மரணமடைந்த நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்தவரும் ஓட்டமாவடி பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்தவருமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய மௌலவி எம்.எம்.அயூப்கான் என்பவராவார்.

மரணமடைந்த நபரின் ஜனாஸாவை கம்போடியா நாட்டில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :